undefined

குரூப்-4 தேர்வில் தோல்வியால் மனவேதனை... இளம்பெண் உயிரிழப்பு!

 

தென்காசி, அக். 26 – அரசு பணித்தேர்வில் தோல்வி அடைந்த மன உளைச்சலும், குடும்பத்தின் திருமண அழுத்தமும் காரணமாக 21 வயது இளம்பெண் விஷம் குடித்து உயிரிழந்த சோகம் தென்காசி மாவட்டத்தில் நிகழ்ந்தது.

முப்புலியூரைச் சேர்ந்த ரவிச்சந்திரனின் மகள் சத்தியரூபா (21), பட்டப்படிப்பு முடித்து அரசு வேலை வாய்ப்புக்காக டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வுக்கு தயாராகி வந்தார். சமீபத்தில் நடைபெற்ற இந்த தேர்வில் எழுதிய அவர், முடிவுகள் வெளியானபோது தேர்ச்சி பெறாதது அறிந்து மனமுடைந்ததாக கூறப்படுகிறது.

இதனுடன், குடும்பத்தினர் திருமண ஏற்பாடுகளைத் தொடங்கிய நிலையில், தனது மனநிலையில் இணங்காத இந்த சூழலைக் எதிர்கொள்ள முடியாமல், சத்தியரூபா மனஅழுத்தத்தில் வாடியதாக தெரிகிறது.

இந்தநிலையில், நேற்று முன்தினம் திடீரென பூச்சிக்கொல்லி மருந்தை உட்கொண்டு மயங்கி விழுந்தார். அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் அவரை உடனடியாக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால், அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி சத்தியரூபா உயிரிழந்தார்.

இ சம்பவத்தையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இளமை வயதில் கனவுகள் சிதறி நிகழ்ந்த இச்சம்பவம், உள்ளூர் சமூகத்தில் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?