வைகை ஆற்றில் தீ வைத்து சாகசாம்.. 2 யூடியூபர்கள் அதிரடியாக கைது!
வைகை ஆற்றில் பெட்ரோலை ஊற்றி தீ வைத்து கொளுத்திவிட்டு அதில் குதிப்பது போல் ரீல்ஸ் எடுத்த இளைஞர்கள் வெளியிட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோ எப்போது எடுக்கப்பட்டது என்ற விவரம் வெளியாகாத நிலையில், இளைஞர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கருத்துகள் பதிவாகி வருகின்றன. ஆற்றுக்குச் செல்லும் நான்கு இளைஞர்கள் தாங்கள் கொண்டு வந்த பெட்ரோலை வட்டமாக ஆற்றில் ஊற்றியுள்ளனர். பிறகு அதில் தீப்பெட்டி ஏற்றி வட்டமாக நெருப்பு எரியத் தொடங்குகிறது. அதே நேரத்தில் ஒரு இளைஞன் அருகிலுள்ள சுவரில் இருந்து எரியும் நெருப்பில் குதிக்கிறான்.
இது பலருக்கு மோசமான முன்னுதாரணமாக அமைய வாய்ப்புள்ளது. இதை அறியாமல், இந்த வீடியோவை வெளியிட்ட இளைஞர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனிடையே இந்த வீடியோவை வெளியிட்ட இளைஞரை போலீசார் தீவிரமாக தேடி வந்த நிலையில் சாத்தான்குளத்தை சேர்ந்த ரஞ்சித் பாலா, சிவக்குமார் கைது செய்யப்பட்டுள்ளனர்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!