undefined

முன்னாள் தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா காலமானார்!! தலைவர்கள் இரங்கல்!!

 


தமிழகத்தின் முன்னாள் தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா ஐ.ஏ.எஸ்  காலமானார். தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரியாக 5 ஆண்டுகள் பணிபுரிந்த காலத்தில் பல்வேறு தேர்தல் சீர்திருத்தங்களை கொண்டு வந்து  பெரும் வரவேற்பை பெற்றவர். தேர்தலில் வெளிப்படைத் தன்மையை உருவாக்கியதில் இவருக்கு முக்கிய பங்கு உண்டு. இவரது  மறைவிற்குமுன்னாள் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா ஐஏஎஸ், காலமானதை அடுத்து தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி இரங்கலை தெரிவித்துள்ளார். 

நாம் ஒரு மிகச் சிறந்த நபரை இழந்துள்ளோம். அவர் மிகவும் எளிமையான மற்றும் நேர்மையான அதிகாரி. தலைமைச் செயலக ஊழியர்களை திகைக்க வைக்கும் வகையில் பணிபுரிந்தாலும் எளிமையின் சிகரமாக ஆட்டோவில் பயணித்து செல்வார். மென்மையாகப் பேசினாலும், வாக்குப்பதிவு நடத்துவதில் அவர் ஒரு கடினமான மாஸ்டராக வலம் வந்தவர் எனக் குறிப்பிட்டுள்ளார்.