அம்மா உணவகங்களில் இன்றும், நாளையும் இலவச உணவு... முதல்வர் உத்தரவு!
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் கடந்த 2 நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. சென்னையில் நேற்று முன் தினம் கொட்டி தீர்த்த கனமழை காரணமாக மாநகரின் பல்வேறு சாலைகளிலும் நேற்று மழை நீர் தேங்கியது. இதனால் சாலைகளில் வாகனங்கள் நீண்ட வரிசையில் ஊர்ந்து சென்றதால் பல்வேறு பகுதிகளிலும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இதுகுறித்து எக்ஸ் தளத்தில் “நேற்று அதிக அளவில் பெய்த வடகிழக்குப் பருவமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில், அனைத்து நிவாரணப் பணிகளும் முழு வீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தாழ்வான பகுதிகளில் வாழும் மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்குத் தேவையான உணவு மற்றும் இதர உதவிகள் பெருநகர சென்னை மாநகராட்சியால் வழங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், சென்னை மாநகரத்தின் மற்ற பகுதிகளில் வாழக்கூடிய ஏழை - எளிய மக்கள் உணவு அருந்தக்கூடிய அம்மா உணவகங்களிலும், இன்றும் நாளையும் இலவசமாக உணவு வழங்கப்படும்.” எனத் தெரிவித்துள்ளார்.