காசாவில் பயங்கர துப்பாக்கிச்சூடு... 5 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சி!
இஸ்ரேலின் ஆக்கிரமிப்பில் உள்ள வெஸ்ட் பேங்க் பகுதியில் திடீரென ஏற்பட்ட கோர துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். நாப்ளஸ் நகருக்குத் தென்மேற்கே உள்ள பகுதியில் உலா வரச் சென்ற பொதுமக்களை இலக்கு வைத்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தகவலறிந்து சம்பவ இடத்திற்குப் பாதுகாப்புக் படையினரும் அவசரச் சிகிச்சைக் குழுவினரும் விரைந்து வந்து மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். இந்தத் திடீர் துப்பாக்கிச்சூடு சம்பவம் காரணமாக அப்பகுதியில் பதற்றமும் பீதியும் நிலவி வருகிறது.
சம்பவ இடத்திற்கு விரைந்த பாதுகாப்புப் படையினர் ஒட்டுமொத்தப் பகுதியையும் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து தீவிரத் தேடுதல் வேட்டையைத் தொடங்கினர். நாப்ளஸ் நகரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள முக்கிய சாலைகளில் தற்காலிகத் தடுப்புகள் அமைக்கப்பட்டுப் போக்குவரத்து முழுமையாக முடக்கப்பட்டுள்ளது. தாக்குதல் நடத்திய நபர்களைப் பிடிப்பதற்காக வான்வழி மற்றும் தரைவழி மூலமாக அதிரடி நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.
நிலைமையின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு அவசரப் பாதுகாப்புக் கூட்டங்களை நடத்தி நிலவரத்தைத் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.நீண்டகாலமாகப் பதற்றம் நிலவி வரும் வெஸ்ட் பேங்க் பகுதியில் மீண்டும் துப்பாக்கிச்சூடு அரங்கேறியிருப்பது அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அசம்பாவிதங்கள் ஏதும் நிகழாமல் தடுக்கும் வகையில் கூடுதல் ராணுவப் படைகள் அப்பகுதியில் குவிக்கப்பட்டுத் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். காயமடைந்தவர்களுக்குத் தேவையான தீவிர மருத்துவச் சிகிச்சைகள் அருகில் உள்ள மருத்துவமனைகளில் தடையின்றி வழங்கப்பட்டு வருகின்றன.