102 வயது மூதாட்டி புதிய கார்டி ஹோவ் சர்வதேச பாலத்தை நடந்து கடந்து சாதனை!

 

 

கனடாவைச் சேர்ந்த 102  வயது மூதாட்டியான ரீட்டா ஜார்ஜெப் கனடா மற்றும் அமெரிக்காவை இணைக்கும் புதிய கார்டி ஹோவ் சர்வதேச பாலத்தைத் தனியாக நடந்து கடந்து சாதனை படைத்துள்ளார். பாலக் கட்டுமானப் பணிகளில் ஏற்பட்ட தாமதம் காரணமாக 2 ஆண்டுகள் காத்திருந்து தனது நீண்ட நாள் ஆசையை அவர் வெற்றிகரமாக நிறைவேற்றிக் கொண்டார். கடந்த 1029 ம் ஆண்டில் அம்பாசிடர் பாலம் திறக்கப்பட்ட வரலாற்று நிகழ்வையும் அவர் இதன் போது அன்புடன் நினைவு கூர்ந்தார்.

வயது 80  வெறும் எண் மட்டுமே என்பதை அவர் தனது விடாமுயற்சியின் மூலம் உலகிற்கு மீண்டும் நிரூபித்துக் காட்டியுள்ளார். அவரது இந்தச் சாதனை பலரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளதுடன் சமூக வலைதளங்களிலும் பெரும் பாராட்டுகளைப் பெற்று வருகிறது. மூதாட்டியின் இந்த ஊக்கமளிக்கும் செயல் பலருக்கு ஒரு சிறந்த முன்னுதாரணமாகவும் திகழ்கிறது.