undefined

பெரும் அதிர்ச்சி.. விமானப் பணிப்பெண்ணுக்கு பாலியல் தொல்லை.. மர்ம நபர் வெறிச்செயல்!

 

இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள  ஐந்து நட்சத்திர ஓட்டலில் இந்தியாவைச் சேர்ந்த ஏர் இந்தியா ஹோஸ்டஸ்  மர்ம நபரால் தாக்கப்பட்டுள்ளார். கடந்த வியாழன் அன்று லண்டனில் உள்ள ஹீத்ரோவில் உள்ள ரெடிஷன் ரெட் ஹோட்டலில் ஏர் இந்தியா விமானக் குழு தங்கியிருந்தது. அன்றைய தினம் இரவு 1.30 மணியளவில் அந்த கும்பலைச் சேர்ந்த விமானப் பணிப்பெண்ணின் அறைக்குள் மர்ம நபர் ஒருவர் நுழைந்தார்.

பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு யாராவது வந்து விடுவார்களோ என்ற அச்சத்தில் அந்த நபர் அங்கிருந்து தப்பியோடினார். இதனை தொடர்ந்து அந்த பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஹோட்டல் நிர்வாகத்திற்கு ஏர் இந்தியா நிர்வாகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. பாதிக்கப்பட்ட பெண் விரைவில் வீடு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆவணி மாத சிறப்புக்கள் , வழிபாடுகள், பண்டிகைகள்!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா