undefined

தமிழகத்தில் அடுத்த 6 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு!

 

கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில், அடுத்த ஒரு வார காலத்திற்கு மழை நீடிக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய கிழக்கு மற்றும் வடகிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது வலுவிழந்து காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறியுள்ளது. இது வடக்கு–வடகிழக்கு திசையில் நகர்ந்து மேலும் வலுவிழக்கக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதே நேரத்தில், மத்திய கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மியான்மர் கடலோரப்பகுதிகளில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது மியான்மர் மற்றும் வங்கதேச கடற்கரையை ஒட்டி நகரும் வாய்ப்பும் உள்ளது.

கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்றும் நாளையும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

மேலும், நவம்பர் 4 முதல் 8 வரை மாநிலத்தின் பல பகுதிகளில் மழை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இன்று நவம்பர் 4ம் தேதி வட தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் இடி மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும்.

நாளை நவம்பர் 5ம் தேதி மற்றும் 6ம் தேதிகளில் மாநிலத்தின் சில பகுதிகளிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இதேபோன்ற மழை ஏற்படும். நவம்பர் 7 மற்றும் 8ஆம் தேதிகளில் மாநிலம் முழுவதும் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்துள்ளது.a

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!