7000க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்களுக்கு எச்.ஐ.வி. தொற்று...  அதிர்ச்சி !

 

கர்நாடக மாநிலத்தில் கல்லூரி மாணவர்களிடையே எச்.ஐ.வி. தொற்று அதிவேகமாகப் பரவி வருவது அம்மாநில மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. அங்குள்ள உயர்கல்வி நிறுவனங்களில் பயிலும் 18 முதல் 25 வயதுக்குட்பட்ட 7,000-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு இந்த நோய் பாதிப்பு இருப்பது மருத்துவப் பரிசோதனைகள் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது. வீட்டை விட்டு வெளியேறி கல்லூரி விடுதிகளில் தங்கிப் படிக்கும் மாணவர்களிடையே போதிய பாதுகாப்பு விழிப்புணர்வு இல்லாததே இதற்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது. இந்தத் தகவல் வெளியாகி மாநிலம் முழுவதும் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.

தொழில்நுட்ப வளர்ச்சி, வாழ்க்கைமுறையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் மற்றும் நோயைப் பற்றிய போதிய விழிப்புணர்வின்மை ஆகியவை இளைஞர்களிடையே இத்தொற்று அதிகரிக்க முக்கியக் காரணங்களாகச் சுட்டிக்காட்டப்படுகின்றன. குறிப்பாக ஒருசில குறிப்பிட்ட கல்லூரி விடுதிகளில் தங்கியிருக்கும் மாணவர்களிடம் இந்த நோய் பரவல் அதிகளவில் கண்டறியப்பட்டுள்ளது. மாநில சுகாதாரத் துறை வல்லுநர்கள் இது குறித்து தீவிர ஆய்வு மேற்கொண்டு உடனடியாக எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்த நிலைமை தொடர்ந்தால் இளைஞர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகும் எனச் சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

இந்த விவகாரத்தின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு, நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்தக் கர்நாடக மாநில அரசு உடனடியாக முக்கிய நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது. மாநிலத்தில் இயங்கி வரும் அனைத்து அரசு மற்றும் தனியார் கல்லூரிகளிலும் சிறப்பு மருத்துவப் பரிசோதனை மற்றும் ஆலோசனை முகாம்களை நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது. இருப்பினும் தனிநபர்களின் சம்மதம் இல்லாமல் எந்தவொரு மாணவருக்கும் கட்டாயப் பரிசோதனை செய்யப்படாது என்றும் தெளிவாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தடுப்பு நடவடிக்கைகள் மூலம் கல்லூரி மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த தீவிர ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன.