கள்ளக்காதலை எதிர்த்த காதல் மனைவி.. உணவில் விஷம் வைத்து கொலை செய்த கொடூர கணவன்..!!

 

மனைவியை உணவில் விஷம் கலந்து கொன்று மாரடைப்பால் இறந்ததாக நாடகமாடிய கணவரை போலீசார் கைது செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் சிக்கமகளூருவில் உள்ள முடிகெரே தாலுகாவில் உள்ள தேவவிர்ந்தாவை சேர்ந்தவர் தர்ஷன். கல்லூரியில் படிக்கும் போது ஸ்வேதாவை காதலித்தார். இருவரும் பெற்றோரின் எதிர்ப்பை மீறி இரண்டு ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்து கொண்டனர். தர்ஷன் மற்றும் ஸ்வேதாவுடன் சேர்ந்து, பெங்களூரு கொடிகேஹள்ளி அருகே ட்ரூ மெடிக்ஸ் லேப் நடத்தி வந்தனர். இவர்களுக்கு ஒரு குழந்தை உள்ளது. இந்நிலையில் கணவரை பிரிந்த பெண்ணுடன் தர்ஷன் தகாத உறவில் இருந்து வந்துள்ளார். இதற்கு ஸ்வேதா எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து அந்த பெண்ணுடனான தொடர்பை கைவிடுவதாக தர்ஷன் கூறியுள்ளார். இருப்பினும், தர்ஷன் பல பெண்களுடன் தொடர்பில் இருந்துள்ளார். இந்நிலையில் கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு தேவவிரிந்தா கிராமத்தில் உள்ள தர்ஷன் வீட்டிற்கு ஸ்வேதா (31) வந்தார். நேற்று ஸ்வேதா திடீரென உயிரிழந்தார். அவர் மாரடைப்பால் இறந்ததாக தர்ஷன் கதறி அழுதார். மேலும் ஸ்வேதாவை அடக்கம் செய்ய நடவடிக்கை எடுத்துள்ளார்.   எனினும், ஸ்வேதாவின் குடும்பத்தினர் தங்கள் மகளின் மரணத்தில் மர்மம் இருப்பதாக கோனிபிடு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சுவேதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனை அறிக்கையில் ஸ்வேதாவின் உடலில் விஷம் கலந்திருந்தது தெரியவந்தது. விஷ ஊசி போட்டு அவர் கொல்லப்பட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். கைது செய் இதையடுத்து தர்ஷனை போலீசார் பிடித்து விசாரித்தனர். அப்போது ராகி உருண்டையில் சயனைடு கலந்து தான் ஸ்வேதாவை கொன்றதாக தர்ஷன் ஒப்புக்கொண்டார். மனைவியை கொலை செய்து நாடகமாடிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.