பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் சிறையில்  மரணம்? பெரும் பரபரப்பு!

 

 

 

அமெரிக்காவைச் சேர்ந்த பாகிஸ்தான் பத்திரிகையாளரான வஜாஹத் சயீத் கான் என்பவர் ஒரு பரபரப்பான தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். பாகிஸ்தானின் முன்னாள் பிரதமரான எழுபத்தி மூன்று வயதான இம்ரான் கான் சிறையில் உயிரிழந்துவிட்டதாக அவர் கூறியுள்ளார். பாகிஸ்தான் ராணுவத்தின் மூத்த அதிகாரிகள் மூவர் தன்னிடம் இத்தகவலைத் தெரிவித்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

allowfullscreen

அதிகாரப்பூர்வமற்ற வழிகள் மூலமாகவே தங்களுக்கு இந்தச் செய்தி கிடைத்ததாக அந்த ராணுவ அதிகாரிகள் கூறியதாகவும் அவர் தெரிவித்துள்ளார். முன்னாள் பிரதமரின் சிறை மரணம் குறித்த இந்தத் தகவலால் அங்கு பெரும் பரபரப்பும் அதிர்ச்சியும் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக பாகிஸ்தான் அரசு மற்றும் சிறைத்துறை அதிகாரிகள் தரப்பிலிருந்து முறையான விளக்கங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.

இந்த விவகாரம் குறித்து பல்வேறு தரப்பினரும் தீவிரமாக விசாரித்து வருவதுடன் கூடுதல் தகவல்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்னாள் பிரதமரின் உடல்நிலை மற்றும் பாதுகாப்பு குறித்து ஏற்கனவே பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ள நிலையில் இந்தச் செய்தி சர்வதேச அளவில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.