போதையில் தினமும் இதே வேளையா போச்சு... கணவர் முகத்தில் ஆசிட் வீசிய மனைவி !

 

மதுபோதையில் இருந்த கணவர் முகத்தில் மனைவி ஆசிட் வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேசம் மாநிலம் கலெக்டர்கஞ்ச் பகுதியில் தப்பு குப்தா பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர் தனது மனைவி மீது காவல் நிலையத்தில் புகார் அளித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அதாவது, எனது மனைவி என்மீது ஆசிட் வீசிவிட்டதாக அளித்த புகாரையடுத்து மனைவியை போலீசார் கைது செய்தனர். பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில் பரபரப்பு தகவல் வெளிவந்தது.

கடந்த சனிக்கிழமை இரவு தப்பு குப்தா வீட்டுக்கு தாமதமாக வந்துள்ளார். இதற்கான காரணத்தை அவரது மனைவி கேட்டுள்ளார். இதில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், தனது கையில் இருந்த பாட்டிலை திறந்து ஆசிட்டை தனது முகத்தில் வீசியதாக புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விசாரணையில் தப்பு குப்தா குடிக்கு அடிமையாகி இருப்பதால்தான் அவர் மீது இந்த ஆசிட் வீச்சு தாக்குதல் நிகழ்ந்துள்ளது என தெரியவந்தது.

இதுமட்டுமில்லாமல், போதை வஸ்துக்களின் பழக்கமும் தப்பு குப்தாவுக்கு இருந்த வந்த காரணத்தால், அவருக்கும், மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டிருப்பதும் கூறப்படுகிறது. தற்போது ஆசிட் வீச்சில் ஈடுபட்ட தப்பு குப்தா மனைவி கைது செய்யப்பட்டிருக்கும் நிலையில், அவரிடம் விசாரணை நடத்தி வருவதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே ஆசிட் வீச்சால் பாதிப்புக்குள்ளான தப்பு குப்தா (40), தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். தற்போது அவரது உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். ,