நாளை புதுச்சேரி ஜிப்மர் வெளிநோயாளி சேவைகள் நிறுத்தம்... நிர்வாகம் அறிவிப்பு!
புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் நாளை நவம்பர் 5ம் தேதி வெளிநோயாளி (OP) பிரிவு இயங்காது என நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், “குருநானக் ஜெயந்தியை முன்னிட்டு ஜிப்மர் மருத்துவமனையின் புறநோயாளிகள் பிரிவு நவம்பர் 5ம் தேதி மூடப்படும்.
அந்த நாளில் மருத்துவ ஆலோசனைக்காக நோயாளிகள் வருவதைக் தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. ஆனால் அவசரப் பிரிவு மற்றும் 24 மணி நேர சேவைகள் வழக்கம் போல் இயங்கும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் அன்றைய தினம் மருத்துவ ஆலோசனை பெற திட்டமிட்டிருந்த நோயாளிகள் தங்களது வருகையை மாற்றிக் கொள்ளுமாறு ஜிப்மர் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!