பிரச்சாரத்திற்கு தயாராகும் குஷ்பு.. மதுரை மத்திய தொகுதியில் சுந்தர்.சி போட்டி!
தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் (NDA) இடம்பெற்றுள்ள ஏ.சி. சண்முகத்தின் புதிய நீதிக்கட்சி, தனது முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் யாரும் எதிர்பார்க்காத வகையில் திரைப்பட இயக்குநர் சுந்தர்.சி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். அதிமுக தலைமையிலான கூட்டணியில் புதிய நீதிக்கட்சிக்கு ஒதுக்கப்பட்ட மதுரை மத்திய சட்டமன்றத் தொகுதி.தொகுதியில் சுந்தர்.சி களம் காண்கிறார்.
'முறை மாமன்' தொடங்கி 'அரண்மனை' வரை பல வெற்றிப் படங்களைக் கொடுத்தவர். அரசியலில் ஏற்கனவே ஏ.சி. சண்முகத்திற்கு ஆதரவாகச் செயல்பட்டு வந்த நிலையில், தற்போது நேரடியாகத் தேர்தலில் போட்டியிடுகிறார்.
மதுரை மத்திய தொகுதி: இந்தத் தொகுதி தற்போது திமுக-வின் வசமுள்ள நிலையில், ஒரு பிரபலத்தை நிறுத்துவதன் மூலம் அங்குப் பலமான போட்டியை உருவாக்க அதிமுக கூட்டணி திட்டமிட்டுள்ளது.