நாளை மெட்டாவில் 3000 பேர் பணிநீக்கம்.... ஊழியர்கள் அதிர்ச்சி !
கொரோனா காலகட்டத்திற்கு பிறகு பெருநிறுவனங்கள் பொருளாதார சிக்கல்களை தீர்க்க முதலில் ஆட்குறைப்பை செய்வது வாடிக்கையாகி வருகிறது. அந்த வகையில் பேஸ்புக், வாட்ஸ் அப் வலைதளங்களை நிர்வகித்து வரும் மெட்டா நிறுவனம் 3,000 பணியாளர்களை பணி நீக்கம் செய்ய இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இந்த ஆட்குறைப்பு நடவடிக்கைகள் நாளை முதல் தொடங்கும் என தெரிகிறது. உலக அளவில் மிகப்பெரிய சமுகவலைத்தளமான பேஸ்புக், இன்ஸ்டாகிராம் ஆகியவற்றை நிர்வகிக்கும் மெட்டா நிறுவனம் உலகளாவிய தனது ஊழியர்களை படையில் குறிப்பிட்ட எண்ணிக்கையை பணிநீக்கம் செய்யும் நடவடிக்கைகளை தொடங்க உள்ளது.இந்நிறுவனத்தின் மனிதவள துணை தலைமை அதிகாரி ஜெனெல் கேல் “ மெட்டா நிறுவனத்தில் உலகம் முழுவதும் மொத்தமாக 72,000 பேர் பணிபுரிகின்றனர். அதில் குறைந்த செயல் திறன் கொண்ட 5 சதவீதம் அதாவது 3000 ஊழியர்கள் ஆட்குறைப்பு செய்யப்பட உள்ளனர்.
பெரும்பாலான நாடுகளில், உள்ளூர் நேரப்படி நாளை அதிகாலை 5 மணி முதல் பணிநீக்க அறிவிப்புகள் ஊழியர்களுக்கு இமெயிலில் வழங்கப்பட உள்ளன. ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி, நெதர்லந்து ஆகியவற்றில் பணிபுரியும் ஊழியர்கள் மட்டும் உள்ளூர் விதிமுறைகள் காரணமாக ஆட்குறைப்பால் பாதிக்கப்படமாட்டார்கள் எனத் தெரிகிறது. ஐரோப்பா, ஆசியா, ஆப்பிரிக்கக் கண்டங்களில் இருப்பவர்கல் இம்மாதம் 11ம் தேதி முதல் 18ம் தேதி வரை ஆட்குறைப்பு அறிவிப்பை எதிர்பார்க்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!
தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?
செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!
தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!