undefined

11 ஆண்டுகளில் மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கை 387 லிருந்து 819 ஆக உயர்ந்துள்ளது... மத்திய அமைச்சர்  ஜேபி நட்டா! 

 

டெல்லி எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியின் 50-வது பட்டமளிப்பு விழாவில் மத்திய சுகாதாரத்துறை மந்திரி ஜே.பி. நட்டா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இதில் அவர் நாட்டில் மருத்துவக் கல்லூரிகளின் வளர்ச்சியைப் பற்றிய தகவல்களை பகிர்ந்தார். கடந்த 11 ஆண்டுகளில் மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கை 387 இலிருந்து 819 ஆக உயர்ந்துள்ளதாகவும், இளங்கலை மருத்துவ இடங்கள் 51,000 இலிருந்து 1.29 லட்சம் மற்றும் முதுகலை இடங்கள் 31,000 இலிருந்து 78,000 ஆக உயர்ந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். அடுத்த ஐந்து ஆண்டுகளில் இளங்கலை மற்றும் முதுகலை படிப்புகளில் கூடுதலாக 75,000 இடங்கள் சேர்க்க திட்டமிடப்பட்டுள்ளது.

மந்திரி நட்டா, தாய்மார்களின் மற்றும் குழந்தைகளின் ஆரோக்கியத்தில் ஏற்பட்ட முன்னேற்றங்களைப் பற்றியும் கூறினார். மாதிரி பதிவு கணக்கெடுப்பு (SRS) தரவுகளின்படி, பிரசவத்தின்போது உயிரிழக்கும் தாய்மார்களின் எண்ணிக்கை விகிதம் (MMR) 130-ல் இருந்து 88 ஆகவும், குழந்தை இறப்பு விகிதம் (IMR) 39-ல் இருந்து 27 ஆகவும் குறைந்துள்ளது. மேலும், 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் இறப்பு விகிதம் (U5MR) 42 சதவீதம் குறைந்தது என்றும், பிறந்த குழந்தை இறப்பு விகிதம் (NMR) 39 சதவீதம் குறைந்துள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

அவர் கூறியதன்படி, இந்தியாவில் காசநோய் பாதிப்பு 17.7 சதவீதம் குறைந்துள்ளது. இது உலக சராசரியான 8.3 சதவீதத்தை விட இருமடங்கு அதிகம் என ‘தி லான்செட்’ அறிக்கை தெரிவிக்கிறது. ஜே.பி. நட்டா, தாய் மற்றும் குழந்தை ஆரோக்கியத்தில் நாட்டில் ஏற்பட்ட முன்னேற்றத்தை முக்கியமாகக் குறிப்பிட்டார்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!