மோடி–புதின் சந்திப்பு... இந்தியாவுக்கு கிடைக்கப்போகும் முக்கிய பலன்கள் என்னென்ன?

 

 

புதுடெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியும், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கும் இடையேயான சந்திப்பு, இந்தியா மற்றும் ரஷ்யா இடையேயான பொருளாதாரக் கூட்டாண்மையை விரிவுபடுத்துவதை மையமாகக் கொண்டு நடைபெற்றுள்ளது. குறிப்பாக, 2030-க்குள் 100 பில்லியன் அமெரிக்க டாலர் என்ற இருதரப்பு வர்த்தக இலக்கை அடைவது இச்சந்திப்பில் முக்கியக் கவனம் பெற்றுள்ளது.

#WATCH | PM @narendramodi holds a bilateral meeting with Russian President Vladimir Putin on the sidelines of the 18th BRICS Summit in New Delhi.@BricsIndia2026 @MEAIndia #BRICS2026 #BRICSIndia2026 #IndiaBRICSChairship #BRICS26OnDD pic.twitter.com/lXD6Q79Y1U

— DD News (@DDNewslive) September 11, 2026

இவர்களது பேச்சுவார்த்தையின் முக்கியக் கவனப் பகுதிகள்:

  • சந்தை விரிவாக்கம்: ரஷ்ய சந்தையில் இந்தியப் பொருட்களுக்கான அணுகலை மேம்படுத்துவதும், இந்திய ஏற்றுமதியை அதிகரிப்பதும்.

  • தொழில்துறை ஒத்துழைப்பு: புதுடெல்லியில் நடைபெற்ற 'இன்நோப்ரோம் இந்தியா 2026' (INNOPROM India 2026) தொழில்துறை கண்காட்சியின் விவாதங்களை அடிப்படையாகக் கொண்டு, இரு நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்களுக்கு இடையே புதிய வணிக வாய்ப்புகளை உருவாக்குவது.

  • உள்கட்டமைப்பு மற்றும் உற்பத்தி: இரயில்வே, சுரங்கப்பாதை அமைத்தல் (tunnelling) மற்றும் ஒருங்கிணைந்த எஃகு மதிப்புச் சங்கிலியை (integrated steel value chain) உருவாக்குதல் போன்ற துறைகளில் ஒத்துழைப்பை ஆராய்வது.