கோர விபத்து.. வெடித்து சிதறிய பாய்லர்.. தூக்கி வீசப்பட்ட 100 பணியாளர்கள்!

 

ஹரியானா மாநிலம் ரேவாரியில் ரசாயன தொழிற்சாலை இயங்கி வருகிறது. இங்கு ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில், இன்று தொழிற்சாலையில் உள்ள கொதிகலன் வழக்கம் போல் அதிக வெப்பத்தில் கொதித்தது. அப்போது யாரும் எதிர்பாராத வகையில் திடீரென பாய்லர் வெடித்தது. இந்த கோர விபத்தில் அதன் அருகே வேலை செய்து கொண்டிருந்த 100க்கும் மேற்பட்டோர் தூக்கி வீசப்பட்டனர்.

பலர் கை, கால்கள் மற்றும் முக தசைகளை இழந்துள்ளனர். இதையடுத்து, அவர்களை மீட்ட மற்ற தொழிலாளர்கள் உடனடியாக அங்குள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.

விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்து எப்படி நடந்தது என விசாரணை நடத்தி வருகின்றனர். தொழிற்சாலையின் உரிமையாளர் தலைமறைவாகியுள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்