எவரெஸ்ட் பனிப்புயலில் 1,000க்கும் மேற்பட்டோர் சிக்கி தவிப்பு... ஒருவர் பலி; 137 பேர் மீட்பு!
எவரெஸ்ட் மலைச்சரிவுகளில் மலையேற்ற வீரர்கள் முகாம்களை அமைத்து தங்கியிருந்த நிலையில் திடீரென ஏற்பட்ட பனிப்புயலில் சிக்கி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். பனிப்புயலில் சிக்கிய 137 மலையேற்ற வீரர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
உலகின் மிக உயரமான மலைப்பகுதியான எவரெஸ்ட் சிகரத்தின் கிழக்கே அமைந்துள்ள திபெத் பிராந்தியத்தில் பனிப்புயல் நிலவி வருகிறது. இந்த மலைச்சரிவுகளில் வெவ்வேறு நாடுகளை சேர்ந்த மலையேற்ற வீரர்கள் முகாம்களை அமைத்து தங்கியிருந்த நிலையில் திடீரென பனிப்புயல் ஏற்பட்டது.
ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர்கள் பனிப்புயலில் சிக்கிய நிலையில் பனிப்புயலில் சீனாவை சேர்ந்த 41 வயது மலையேற்ற வீரர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுவரை 137 பேர் மீட்கப்பட்டனர். எவரெஸ்ட் பனிப்புயலில் சிக்கி தவித்து வரும் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து தீவிரமாக நடந்து வருகிறது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!