undefined

 தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் 10,000க்கும் மேற்பட்ட காலி பணியிடங்கள்.. பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தகவல்!

 
 

தமிழகத்தில் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு கடந்த ஜூலை 31ம் தேதியுடன் நிறைவுபெற்ற நிலையில் அரசுப் பள்ளிகளில் 10,000க்கும் மேற்பட்ட ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருப்பது தெரிய வந்துள்ளது.பொது மாறுதல் கலந்தாய்வில் ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் பங்கேற்று தாங்கள் விரும்பிய இடங்களுக்கு இடமாறுதல் பெற்றனர். மாவட்டம் விட்டு மாவட்டம் நடைபெற்ற கலந்தாய்வின் முடிவில் அரசுப் பள்ளிகளில் 5,786 இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருப்பது தெரிய வந்துள்ளது.

 
இதில் அதிகபட்சமாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 892 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருப்பதாகவும், திருவண்ணாமலையில் 720, திருப்பூரில் 500, தருமபுரியில் 413, புதுக்கோட்டையில் 379, சேலத்தில் 289 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருப்பதாகவும் தெரிய வந்துள்ளது. அதே சமயம் சென்னை, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் ஆசிரியர் காலிப்பணியிடங்கள் எதுவும் இல்லை. இதே போன்று, அரசுப் பள்ளிகளில் 2,000க்கும் மேற்பட்ட முதுநிலை ஆசிரியர் பணியிடங்கள், 2,600-க்கும் மேற்பட்ட பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் என ஒட்டுமொத்தமாக தமிழக அரசுப் பள்ளிகளில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருப்பதாக பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டில் அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளது. அரசு பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கையை அதிகரிக்க வேண்டும் என்கிற முனைப்புடன் செயல்பட்டு வரும் பள்ளிக்கல்வித்துறை அதற்கேற்ப அரசு பள்ளிகளில் ஆசிரியர்களை நியமிக்க வேண்டுமென கல்வியாளர்களும், பெற்றோர்களும் வலியுறுத்தியுள்ளனர்.

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா