வினாத்தாள் கசிவால் நீட் தேர்வு ரத்து ... 18 வயது மருத்துவ மாணவி தூக்கிட்டுத் தற்கொலை!
மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கான நீட் நுழைவுத்தேர்வு கடந்த மே 3-ஆம் தேதி நாடு முழுவதும் சுமார் 22.80 லட்சம் மாணவ, மாணவிகளால் எழுதப்பட்டது. எனினும், தேர்வு நடப்பதற்கு முன்பே ராஜஸ்தான் மாநிலத்தில் வினாத்தாள் கசிந்தது போன்ற பல்வேறு முறைகேடுகள் அம்பலமானதால், தேசிய தேர்வு முகமை இந்தத் தேர்வை அதிரடியாக ரத்து செய்ததுடன், அடுத்த மாதம் 21-ஆம் தேதி மறுதேர்வு நடைபெறும் என்றும் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது.
இந்தத் திடீர் அறிவிப்பானது நாடு முழுவதும் மருத்துவக் கனவுகளோடு காத்திருந்த பல்லாயிரக்கணக்கான சாமானிய ஏழை எளிய மாணவர்களையும், அவர்தம் பெற்றோர்களையும் பெரும் கவலையிலும் ஆழமான மன உளைச்சலிலும் ஆழ்த்தியது. அந்த வரிசையில், கர்நாடக மாநிலம் கலபுராகி பகுதியைச் சேர்ந்த பதினெட்டு வயது இளம் மாணவி பாக்யஸ்ரீ என்பவரும் இந்தத் தேர்வை எழுதிவிட்டு, தான் நல்ல மதிப்பெண்கள் பெற்று நிச்சயம் தேர்ச்சி அடைவேன் என்ற அசுர நம்பிக்கையில் தனது பெற்றோரிடம் கூறி வந்துள்ளார்.