undefined

  மருத்துவத்துக்கான நோபல்  மூவருக்கு பகிர்ந்தளிப்பு

 


 
ஜப்பான் மருத்துவர் மற்றும் 2  அமெரிக்கர்கள் உட்பட 3  பேருக்கு 2025ம் ஆண்டின் மருத்துவத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.புற நோய் எதிர்ப்பு சகிப்புத்தன்மை குறித்த அவர்களின் கண்டுபிடிப்புக்காக இந்த ஆண்டுக்கான மருத்துவ நோபல் பரிசு வழங்கப்படுகிறது. இதனை அமெரிக்கர்களான மேரி, இ பிரன்கோவ், ஃபிரெட் ராம்ஸ்டெல், ஜப்பானின் ஷிமோன் சகாகுச்சி  3  பேர் பகிர்ந்துகொள்கின்றனர்.  ஒவ்வொரு ஆண்டும்  இயற்பியல், வேதியியல், மருத்துவம், இலக்கியம், பொருளாதாரத் துறைகளில் முக்கிய பங்களிப்பை ஆற்றியவா்களுக்கும் அமைதிக்காக பாடுபட்டவா்களுக்கும் நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருதை பெறுபவர்களுக்கு தங்கப் பதக்கம், சான்றிதழ் மற்றும் இந்திய மதிப்பில் ரூ.8.87 கோடி (10 லட்சம் டாலா்) ஆகியவை பரிசாக வழங்கப்படுகின்றன. அந்த வகையில் நடப்பாண்டில்  மருத்துவத்துக்கான நோபல் பரிசு குறித்த அறிவிப்பை நோபல் அமைப்பு இன்று வெளியிடப்பட்டுள்ளது.


வாரத்தின் முதல் நாளான இன்று, மருத்துவத்துக்கான நோபல் பரிசுடன் அறிவிப்பு தொடங்கியிருக்கிறது. புற நோய் எதிர்ப்பு சகிப்புத் தன்மைக்கான கண்டுபிடிப்புக்காக மூன்று விஞ்ஞானிகளுக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து வெளியான தகவலில்  நமது நோயெதிர்ப்பு அமைப்பு ஒரு பரிணாம வளர்ச்சியின் தலைசிறந்த படைப்பு. ஒவ்வொரு நாளும் அது ஆயிரக்கணக்கான வைரஸ்கள், பாக்டீரியாக்கள் மற்றும் பிற நுண்ணுயிரிகள் நம் உடலை ஆக்கிரமிக்கும் முயற்சிகளிலிருந்து பாதுகாக்கிறது. உடலில் இயங்கி வரும் நோய் எதிர்ப்பு அமைப்பு இல்லாமல், நாம் உயிர்வாழவே முடியாது.
 
மனிதனுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருக்கும் நுண்ணுயிரிகள் ஒன்றுபோல அடையாளம் காண எந்த சீருடையும் அணிந்திருப்பது இல்லை .  சில கிருமிகள் மனித செல்களைப் போலவும் இருக்கலாம். எனவே நோயெதிர்ப்பு அமைப்பு எதைத் தாக்க வேண்டும், எதைப் பாதுகாக்க வேண்டும் என்பதை எவ்வாறு கண்காணிக்கிறது? நோயெதிர்ப்பு அமைப்பு ஏன் நம் உடல் செல்களை தாக்குவதில்லை?
இந்த கேள்விகளுக்கான பதில் ஏற்கனவே தங்களுக்குத் தெரியும் என மருத்துவ விஞ்ஞானிகளும் ஆராய்ச்சியாளர்களும் நீண்ட காலமாக நம்பியிருந்தனர். உடலின் மைய நோய் எதிர்ப்பு சகிப்புத்தன்மை எனப்படும் ஒரு செயல்முறை மூலம் நோயெதிர்ப்பு செல்கள் முதிர்ச்சியடைகின்றன  .மேரி பிரன்கோவ், பிரெட் ராம்ஸ்டெல் மற்றும் ஷிமோன் சகாகுச்சி ஆகியோர் புற நோய் எதிர்ப்பு சகிப்புத்தன்மை தொடர்பான கண்டுபிடிப்புகளுக்காக 2025 ம் ஆண்டு மருத்துவத்திற்கான நோபல் பரிசை பெற்றுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?