செல்போனில் பதிவான ஆபாச வீடியோ.. கள்ளக்காதல் ஜோடி சோக முடிவு !!

 

கோவை போத்தனூர் சக்தி ஈஸ்வரன் நகரை சேர்ந்தவர் கமீலா பானு (34), என்பவருக்கு 2 மகள்கள் உள்ளனர். கமீலா பானுக்கும், வெள்ளலூர் குடிசை மாற்று வாரிய குடியிருப்பை சேர்ந்த சலீம் (44) என்பவருக்கும் அறிமுகம் ஏற்பட்டது. பின்னர் இந்த பழக்கம் நெருக்கமாக இருவரும் நெருகி பழக ஆரம்பித்தனர். 

இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்துள்ளனர். இதனை சலீம் தனது செல்போனில் படம்பிடித்து ஆபாச போட்டோ, வீடியோ எடுத்து வைத்துள்ளார். இந்த நிலையில் கள்ளக்காதலர்கள் இருவருக்கும் கடந்த சில நாட்களுக்கு முன்பு கருத்து வேறுபாடு ஏற்பட்டு சலீமுடன் பேசுவதை கமீலா பானு தவிர்த்து விட்டார். இதனால் அவர் இருவரும் நெருக்கமாக இருந்த ஆபாச படம் மற்றும் வீடியோக்களை சமூகவலைதளங்களில் வெளியிடுவதாக மிரட்டியுள்ளார்.

மேலும் கரும்புக்கடையில் வசித்து வந்த கமீலா பானுவின் சகோதரியை சந்தித்து, நாங்கள் இருவரும் ஆபாசமாக இருந்த போட்டோ, வீடியோக்கள் உள்ளன எனக்கூறி  காட்டினார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அவர், தங்கை கமீலா பானுவை செல்போனில் தொடர்பு கொண்டு கண்டித்தார். இதில் மனம் உடைந்த அவர், தான் செய்த தவறு வெளியே தெரிந்துவிட்டதே என விரக்தியடைந்து வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். 

இது குறித்து போத்தனூர் போலீசார் வழக்கு பதிந்து சலீமை தேடி வந்தனர். இந்நிலையில் பொள்ளாச்சி ரோடு பகுதியில் மயங்கி கிடந்த சலீம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். விசாரணையில் அவர், போலீசாரிடமிருந்து தப்பிக்க ஆசிட் குடித்து தற்கொலை செய்தது தெரியவந்துள்ளது. உயிரிழந்த சலீம்க்கு மனைவி, 2 மகள்கள் உள்ளனர்.