நம்பாதீங்க... அமிர்தசரஸ் ராணுவ தளத்தின் மீது பாகிஸ்தான் தாக்குதல் உண்மையல்ல... திட்டவட்டம்!
இந்தியாவில் காஷ்மீரில் பாகிஸ்தான் நடத்திய தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடியாக ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. சில மணிநேரங்களுக்குப் பிறகு, அமிர்தசரஸில் உள்ள ஒரு இராணுவத் தளத்தை பாகிஸ்தான் தாக்கியதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. .
பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு பயங்கரவாதத்தை எதிர்கொள்ள இந்திய ஆயுதப் படைகளால் தொடங்கப்பட்ட ஆபரேஷன் சிந்தூர் குறித்த பல பாகிஸ்தான் செய்திகளை மத்திய அரசு உண்மைச் சரிபார்த்துள்ளது . சமூக ஊடகங்களில் "சந்தேகத்திற்குரிய உள்ளடக்கம்" பரப்பப்படுவதற்கு எதிராக பத்திரிகை தகவல் பணியகத்தின் உண்மை சரிபார்ப்பு பிரிவு எச்சரிக்கை விடுத்தது, லாகூரில் 3 குண்டுவெடிப்புகள், விமானப் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. ஒவ்வொரு தகவலையும் கவனமாக ஆராய்வது மிக முக்கியம்," என அது ஒரு பதிவில் கூறியது. இந்திய ஆயுதப்படைகள் அல்லது ஆபரேஷன் சிந்தூர் தொடர்பான தகவல்களைப் பகிர்ந்து கொள்ளும்பை குடிமக்களைக் கேட்டுக் கொண்டுள்ளது. "குறிப்பாக இந்திய ஆயுதப்படைகள் தொடர்பான சந்தேகத்திற்குரிய உள்ளடக்கம் அல்லது தற்போதைய நிலைமை தொடர்பான ஏதேனும் தகவல்களை நீங்கள் சந்தித்தால், #PIBFactCheck. WhatsApp: +91 8799711259; மின்னஞ்சல்: socialmedia@pib.gov.in" என்று அது கூறியது.