undefined

  அரசு பள்ளிச் சுற்றுச்சுவரில் பெட்ரோல் குண்டு வீச்சு... 3 சிறார்கள் உட்பட 4 பேர் கைது! 

 
 

தூத்துக்குடி மாவட்டம் ஆலந்தா ஊராட்சிக்கு உட்பட்ட சவலாப்பேரி அரசு மேல்நிலைப் பள்ளி சுற்றுச்சுவரில் நேற்று முன்தினம் இரவு இரண்டு பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டன. இதுகுறித்து புளியம்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், வாகைகுளம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற காளான் வளர்ப்பு கருத்தரங்கில் சவலாப்பேரி மற்றும் வல்லநாடு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டது தெரியவந்தது. அப்போது வல்லநாடு பள்ளி மாணவர்கள், சவலாப்பேரி மாணவர்களை கேலி செய்ததால் தகராறு ஏற்பட்டது. பின்னர் ஆசிரியர்கள் சமரசம் செய்து மாணவர்களை அனுப்பியிருந்தனர்.

அதைத்தொடர்ந்து, சிலர் வாகைகுளம் பஸ் நிறுத்தத்தில் வல்லநாடு மாணவர்களைத் தாக்க முயன்றதாக கூறப்படுகிறது. அவர்கள் தப்பியதால் ஆத்திரமடைந்த 4 பேர், சவலாப்பேரி அரசு மேல்நிலைப்பள்ளி சுற்றுச்சுவரில் இரண்டு பெட்ரோல் குண்டுகளை வீசியுள்ளனர். இதுகுறித்து போலீசார் 3 இளம்சிறார்கள் மற்றும் ஓட்டப்பிடாரம் சொக்கநாதபுரத்தைச் சேர்ந்த சுரேந்தர் (19) ஆகிய நால்வரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!