சூடானில் விமான விபத்து... மலைப்பகுதியில் மோதி நொறுங்கியது... 15 பேர் பலி!

 

தெற்கு சூடான் தலைநகர் ஜூபாவில் நேற்று (ஏப்ரல் 27, 2026) நடந்த விமான விபத்து குறித்த கூடுதல் மற்றும் துல்லியமான தகவல்கள் கிடைத்துள்ளன. இந்த விபத்தில் விமானத்தில் பயணம் செய்த அனைவரும் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.

விபத்துக்குள்ளானது சிட்டி லிங்க் ஏவியேஷன் (CityLink Aviation) நிறுவனத்திற்குச் சொந்தமான செஸ்னா 208 கேரவன் (Cessna 208 Caravan) ரக சிறிய பயணிகள் விமானம் ஆகும். நேற்று காலை 9:15 மணிக்கு 'யே' (Yei) நகரிலிருந்து ஜூபா சர்வதேச விமான நிலையத்தை நோக்கிப் புறப்பட்டது. புறப்பட்ட 30 நிமிடங்களில் (9:43 மணி அளவில்) விமானக் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்தது.

<a style="border: 0px; overflow: hidden" href=https://youtube.com/embed/DC7_YRbtqbI?autoplay=1&mute=1><img src=https://img.youtube.com/vi/DC7_YRbtqbI/hqdefault.jpg alt=""><span><div class="youtube_play"></div></span></a>" title="YouTube video player" width="560">

விமானி உட்பட மொத்தம் 14 பேர் உயிரிழந்தனர். இவர்களில் 12 பேர் தெற்கு சூடான் நாட்டவர், 2 பேர் கென்ய நாட்டைச் சேர்ந்தவர்கள். விபத்து நடந்த சமயம் அந்தப் பகுதியில் கடுமையான பனிமூட்டம் மற்றும் பலத்த மழை பெய்துள்ளது. இதனால் பார்வைத்திறன் (Visibility) மிகக் குறைவாக இருந்ததே விபத்துக்கு முதன்மைக் காரணம் என அந்நாட்டுச் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் (SSCAA) தெரிவித்துள்ளது.

ஜூபா நகரிலிருந்து தென்மேற்கே சுமார் 20 கி.மீ தொலைவில் உள்ள ஒரு மலைப்பகுதியில் விமானம் மோதி தீப்பிடித்துள்ளது. சமூக வலைதளங்களில் பகிரப்பட்ட வீடியோக்களில், மலைப்பகுதியில் விமானத்தின் எஞ்சிய பாகங்கள் எரிந்து கொண்டிருப்பது தெரிகிறது.

மலைப்பாங்கான மற்றும் அடர்ந்த பனிமூட்டம் கொண்ட பகுதி என்பதால் மீட்புக் குழுவினர் சம்பவ இடத்தைச் சென்றடைவதில் சிரமம் ஏற்பட்டது. விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்கள் அடையாளம் காண முடியாத அளவிற்குப் பாதிக்கப்பட்டுள்ளதாக ஐநா மீட்புக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

தெற்கு சூடானில் போதிய உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாததாலும், காலாவதியான பழைய விமானங்களைப் பயன்படுத்துவதாலும் இது போன்ற விபத்துகள் அடிக்கடி நிகழ்கின்றன.