"அன்புத் தம்பி விஜய்க்கு வாழ்த்துகள்!" - முதலமைச்சராகப் பதவியேற்கும் தளபதிக்கு பிரேமலதா விஜயகாந்த் நெகிழ்ச்சி!
தமிழகத்தின் புதிய முதலமைச்சராகத் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் இன்று பொறுப்பேற்கும் வேளையில், அவருக்குத் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.. "முதலமைச்சராகப் பொறுப்பேற்கும் எனது அன்புத் தம்பி விஜய்க்கு வாழ்த்துகள்" என அவர் தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.. திரையுலகில் தனது கணவர் விஜயகாந்துடன் நெருக்கமான நட்பு கொண்டிருந்த விஜய்யின் இந்த அரசியல் வெற்றியை அவர் நெகிழ்ச்சியுடன் வரவேற்றுள்ளார்..
தமிழக சட்டமன்றத் தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த விஜய், இன்று காலை 10:00 மணியளவில் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறும் பிரம்மாண்ட விழாவில் முதலமைச்சராகப் பதவியேற்கிறார்.. சுமார் 60 ஆண்டுகால திராவிடக் கட்சிகளின் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு, ஒரு புதிய அரசியல் அத்தியாயத்தைத் தொடங்கி வைக்கும் விஜய்யின் இந்த முயற்சியைத் தேமுதிக பாராட்டியுள்ளது.. திரையில் இருந்து கோட்டைக்குச் செல்லும் விஜய்யின் பயணம் சிறப்பாக அமைய வேண்டும் என பிரேமலதா தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்..
புதிய முதலமைச்சராகப் பொறுப்பேற்கும் விஜய், ஏழை எளிய மக்களின் நலன் காக்கும் வகையில் ஊழலற்ற வெளிப்படையான ஆட்சியை வழங்க வேண்டும் எனப் பல்வேறு அரசியல் தலைவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.. அந்த வரிசையில், விஜய்யின் இந்தப் புதிய தொடக்கம் தமிழக மக்களுக்குப் பயனுள்ளதாக அமைய வேண்டும் எனத் தேமுதிக தனது வாழ்த்துகளைப் பதிவு செய்துள்ளது.. பதவியேற்பு விழாவைக் காணத் தமிழகம் முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான தொண்டர்கள் சென்னையில் குவிந்துள்ள நிலையில், இந்த வாழ்த்துச் செய்தி தவெக தொண்டர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.