undefined

இன்று இலங்கை கடற்படையை கண்டித்து 4வது நாளாக ராமேசுவரம் மீனவர்கள் வேலை நிறுத்தம்!

 

இன்று இலங்கை கடற்படையின் நடவடிக்கையை எதிர்த்து ராமேசுவரம் மீனவர்கள் 4வது நாளாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த 8ம் தேதி ராமேசுவரத்தில் மீன்பிடிக்க சென்ற 4 விசைப்படகுகள் மற்றும் அவற்றில் இருந்த 30 மீனவர்களை இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி கைது செய்து சிறையில் அடைத்தனர். இதே போல காரைக்கால் மீனவர்களிலிருந்து 17 பேர் கைது செய்யப்பட்டனர்.

இதன் பின்னர் ராமேசுவரம் மீன்வளத்துறை டோக்கன் அலுவலகம் அருகே 10-ந்தேதி அனைத்து விசைப்படகு மீனவர்கள் சங்க ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில், பறிமுதல் செய்யப்பட்ட மற்றும் சேதமடைந்த படகுகளுக்கு அரசால் உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்றும், இலங்கை கடற்படையின் நடவடிக்கையை கண்டித்து, மத்திய மற்றும் மாநில அரசுகளின் கவனத்தை ஈர்க்கும் வகையில் மீன்பிடிக்க செல்லாமல் காலவரையற்ற வேலை நிறுத்தம் மேற்கொள்ள தீர்மானம் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது.

இதன்படி, 11-ந்தேதியிலிருந்து ராமேசுவரம் மீனவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று இது 4வது நாளாகவும் தொடர்கிறது. வேலை நிறுத்தத்தால் 800-க்கும் மேற்பட்ட விசைப்பகுகள் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டு, நாள் ஒன்றுக்கு பல கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?