விஷால் பட நடிகர் மீது வன்கொடுமை வழக்கு!! ரசிகர்கள் அதிர்ச்சி!!
நடிகர் விஷாலின் சத்யம் படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகர் உபேந்திரா. கர்நாடகா மாநிலம், பெங்களூரில் வசித்து வரும் பிரபல கன்னட நடிகர் உபேந்திரா. இவர் 'பிரஜாகியா' கட்சியின் 6வது ஆண்டு விழாவை ஆகஸ்ட் 12ம் தேதி விமரிசையாக கொண்டாடினார். இதற்காக சமூக வலைதளங்களில் அவரது கருத்துக்களையும், கொள்கைகளையும் பதிவிட்டார். அதன்படி ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராமில் நேரலையில் தலித் சமூகத்தினருக்கு எதிராக கருத்துக்களைத் தெரிவித்தார். அவரின் இந்த சர்ச்சை பேச்சுக்கு மாநிலம் முழுவதும் கடும் எதிர்ப்பு உருவாகியுள்ளது.
இதனையடுத்து நடிகர் உபேந்திரா மீது உடனடியாக காவல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என நகரின் பல பகுதிகளில் சாலைகளில் டயர்களை எரித்து போராட்டம் நடத்தப்பட்டது. அத்துடன் காவல் நிலையத்தில் உபேந்திரா மீது பொதுநல வழக்கும் தொடுக்கப்பட்டுள்ளது. இந்த புகாரின் அடிப்படையில் உபேந்திரா மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நேற்று வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதே பல பகுதிகளில் புகார்கள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன.
இதனையடுத்து நடிகர் உபேந்திரா தனது பேச்சுக்கு மன்னிப்பு கோரியுள்ளார்.இந்த மன்னிப்பு குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் "குழந்தை பருவத்தில் இருந்து கடுமையான பசி பட்டினியோடு வாடியவன் நான். பசி, அவமானம், அடக்குமுறையோடு வாழ்ந்தவன் ஒரு வகுப்பினரை இழிவாகப் பேசுவேனா? அப்படி பேசுவதனால் என்ன பயன்? ஒரு பழமொழியை தவறாகப் பயன்படுத்தி விட்டேன். என் மன்னிப்பை ஏற்றுக்கொள்ள உங்களுக்கு தைரியம் இல்லையா" என பதிவிட்டுள்ளார்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!
ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?