undefined

 ரோஹித் பாய், விராட்டை  கேட்டதா சொல்லுங்க... பெண் ரசிகையுடன்  ஆட்டோகிராப் , போட்டோகிராப்... நெகிழ்ச்சி வீடியோ!  

 

நியூசிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டிகள் நாளை  அக்டோபர் 24ம் தேதி புனேவில் நடைபெற உள்ளது. இந்த போட்டி  மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்கம் (எம்சிஏ) மைதானத்தில் நடைபெற இருக்கும் நிலையில்  அங்கு  பயிற்சி எடுப்பதற்காக ரோஹித் சர்மா உட்பட  இந்திய வீரர்கள் மைதானத்திற்குச் சென்றார்கள். அப்போது ரோஹித் சர்மா செல்வதை அங்கிருந்த பெண் ரசிகை ஒருவர் பார்த்தார்.

இதனால் இன்ப அதிர்ச்சி அடைந்த அந்தப் பெண்  ரசிகை ஆனந்தக் கண்ணீரில் நன்றி நன்றி ரோஹித் பாய் என கூறினார். அத்துடன் விராட் கோலியின் தீவிரமான ரசிகை நான். நான் அவரை கேட்டதாக சொல்லுங்க எனக் கூறுகிறார்.  
அதற்கு ரோஹித் சர்மாவும் சிரித்துக்கொண்டு “கண்டிப்பாக விராட் கோலியிடம் சொல்கிறேன்” எனக் கூறுகிறார்.  நெகிழ்ச்சியடைந்த அந்த பெண் ரசிகை உற்சாகத்துடன் வீட்டிற்கும் செல்கிறா. இச்சம்பவம் குறித்த  வீடியோ  சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.