undefined

அரசு பேருந்துக்கு கிடாய் வெட்டி வழிபட்ட கிராம மக்கள்... 7 வருட பாதுகாப்பான பயணத்திற்கு நன்றிக்கடன்!

 

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பஸ் டெப்போவில் தினமும் காலை 6:40 மணிக்கு சத்தியமங்கலத்தில் இருந்து திருப்பூர் வழியாக தேனிக்கு பண்ணாரி, ராஜன்நகர், பசுவபாளையம், கொத்தமங்கலம், பவானிசாகர், பனையம்பள்ளி கிராமங்கள் வழியாக புளியம்பட்டி சென்றடைகிறது. அங்கிருந்து திருப்பூர் சென்று திண்டுக்கல் வழியாக தேனி சென்றடைகிறது. இந்த சாலைப் பேருந்தில் கடந்த 15 ஆண்டுகளாக மேற்கண்ட கிராமங்களைச் சேர்ந்த சுமார் 56 பயணிகள் தினமும் பயணம் செய்து வருகின்றனர்.

இந்த பஸ்சில் திருப்பூர் பனியன் கம்பெனிகளுக்கு வேலைக்கு செல்கின்றனர். இந்தப் பேருந்தில் பயணம் செய்யும் பயணிகள் அனைவரும் கடந்த 6 ஆண்டுகளாக கிடாய் வேட்டி பூஜை செய்து வருகின்றனர். ஏனெனில் பேருந்து தினமும் சரியான நேரத்தில் வந்து பாதுகாப்பான மகிழ்ச்சியான பயணத்தை தருவதாக கூறப்படுகிறது .

அந்தவகையில் இந்த ஆண்டும் இன்று காலை பஸ்சுக்கு மாலை அணிவித்து, வாழைமரம் கட்டி, டயர்களில் சந்தனம் பூசி, உள்ளே பலூன்கள் கட்டி, பஸ் முன் பூஜை செய்து, அரசு பஸ்சுக்கு ஆட்டை அறுத்தனர். பெண்கள் பொங்கல் வைத்து சாமியை வழிபட்டனர். இந்த நிகழ்வைக் கண்டு மக்கள் வியப்படைந்தனர். அங்குள்ள ஏழைகளுக்கு கிடாய் வெட்டி விருந்து போடப்பட்டது.

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா