அமைச்சரவையில் இருந்து சரத்குமார் நீக்கம்.. முதல்வர் விஜய் முடிவு!

 

கிரிக்கெட் மைதானத்தில் போதைப்பொருள் பயன்படுத்தியதாக எழுந்துள்ள சர்ச்சைகள் மற்றும் துறை ரீதியான செயல்பாடுகளில் நிலவும் மந்தமான போக்கு காரணமாக, அமைச்சர் சரத்குமாரை அமைச்சரவையில் இருந்து நீக்க முதலமைச்சர் விஜய் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த கால கிரிக்கெட் போட்டியின் போது மைதானத்தில் எடுக்கப்பட்டதாகக் கூறப்படும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலானது. அதில் அவர் போதைப்பொருள் போன்ற ஒரு பொருளைப் பயன்படுத்தியது போன்ற காட்சிகள் இடம்பெற்றிருந்தது அரசியல் அரங்கில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

இந்த விவகாரம் தொடர்பாக அவர் தரப்பில் தெரிவிக்கப்பட்ட விளக்கங்கள் மற்றும் வாதங்கள் கட்சித் தலைமைக்கு முழுமையான திருப்தியை அளிக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

தொடரும் சர்ச்சைகள் மற்றும் துறை சார்ந்த செயல்பாடுகளில் ஏற்பட்ட தேக்க நிலை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, அரசின் நற்பெயரைக் காக்கும் பொருட்டு அவரைப் பதவி நீக்கம் செய்யும் முடிவை நோக்கி முதல்வர் விஜய் பரிசீலித்து வருவதாகத் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.