undefined

  ஜூலை 30ல் பருவ காலங்களை கணிக்கும் செயற்கைக்கோள்... இஸ்ரோ தலைவர்!

 


 
இஸ்ரோ தலைவர் நாரயணன்  மழைக்காலம் மற்றும் பருவ காலங்களில் மேகமூட்டங்கள் எவ்வளவு இருந்தாலும் அதில் இருக்கக்கூடிய விஷயங்களை தெளிவாக புகைப்படம் எடுக்க உதவும் புதிய செயற்கைக்கோள், ஜூலை 30ம் தேதி விண்ணில் ஏவப்படும் எனத்  தெரிவித்துள்ளார்.


விமான நிலையத்தில் இஸ்ரோ தலைவர் நாராயணன் கூறுகையில், "ஜூலை 30ம் தேதி நாசா மற்றும் இஸ்ரோ இணைந்து செயற்கைக்கோள் ஒன்றை விண்ணில் ஏவ உள்ளது. இதில் 2 முக்கிய விஷயம் உள்ளது. மழைக்காலம் மற்றும் பருவ காலங்களில் மேகமூட்டங்கள் எவ்வளவு இருந்தாலும் அதில் இருக்கக்கூடிய விஷயங்களை தெளிவாக புகைப்படம் எடுக்க முடியும். மற்றொன்று பேரிடர் காலங்களை முழுமையாக கண்காணித்து தெளிவான தகவல்களை தர முடியும்.


இந்த செயற்கைக்கோள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்த ஆண்டு 12 ராக்கெட்டுகள் விண்ணில் செலுத்தப்பட உள்ளது. பல்வேறு தொழில்நுட்பங்கள் பொருந்திய செயற்கைக்கோளை விண்ணில் செலுத்துவதற்கான பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. குறிப்பாக ஆளில்லாத செயற்கைக்கோளை இந்த ஆண்டு டிசம்பரில் அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது.  நாட்டு மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் பாதையில் எங்களுடைய பணிகளும் இருக்கும். அதற்காக பல திட்டங்களை உருவாக்கி வருகிறோம்" எனத் தெரிவித்துள்ளார்.