அதிர்ச்சி!! தங்கையை கொலை செய்து தலையுடன் காவல்நிலையம் சென்ற அண்ணன்!!

 

உத்தரபிரதேச மாநிலம் பதேபூர் மாவட்டம் மித்வாரா கிராமத்தில் வசித்து வருபவர்  ஆசிபா . இவருக்கு வயது 18. இவரது சகோதரர் 22 வயது ரியாஸ்  .  ஆசிபாவும் அதே கிராமத்தில் வசித்து வரும்  சந்த் பாபுவும்  காதலித்து வந்தனர். காதலர்கள் இருவரும் கடந்த சில நாட்களுக்கு முன் வீட்டை விட்டு வெளியேறி தனியாக வசித்து வந்தனர்.  ஆசிபாவின் குடும்பத்தினர் காவல்நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில்  வழக்குப்பதிவு செய்து  போலீசார் ஆசிபாவையும் அவரது காதலன் சந்த் பாபுவையும் கண்டுபிடித்தனர்.

ஆசிபாவை அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைத்து விட்டனர்.  சந்த் பாபுவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.இந்நிலையில், மாற்று மதத்தை சேர்ந்தவரை காதலித்து அவருடன் வீட்டை விட்டு வெளியேறியது தவறு என ஆசிபாவை அவரது அண்ணன் குற்றம் சாட்டினார். இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.  வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த ரியாஸ் வீட்டில் இருந்த கூர்மையான ஆயுதத்தால் தங்கை ஆசிபாவின் தலையை வெட்டிசாய்த்தார்.  

பின்னர் வெட்டி எடுத்த ஆசிபாவின் தலையுடன் வீட்டில் இருந்து நடந்தே காவல்நிலையத்தில் சரணடைந்துள்ளார். இதையடுத்து, ரியாசை கைது செய்த போலீசார் ஆசிபாவின் தலையை அவரிடமிருந்து கைப்பற்றினர்.   வீட்டில் கிடந்த ஆசிபாவின் தலையில்லா உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தங்கை மாற்று மதத்தை சேர்ந்தவரை காதலித்ததால் அண்ணனே தங்கையின் தலையை வெட்டி எடுத்து காவல் நிலையத்தில் சரணடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் எற்படுத்தியுள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

மாங்கல்ய தோஷம் நீங்க ஆடி மாசத்துல இதைச் செய்ய மறக்காதீங்க!