undefined

பஞ்சாபில் அதிர்ச்சி... கள்ளச்சாராயம் குடித்து 15 பேர் மரணம்... 6 பேர் மருத்துவமனையில் அனுமதி!

 
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் உள்ள ஐந்து கிராமங்களில் கள்ளச்சாராயம் குடித்து 15 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். 6 பேர் மருத்துவமனையில் கவலைக்கிடமான நிலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருவதாக போலீசார் தெரிவித்தனர் .

பங்கலி, படால்புரி, மராரி கலன், தெரேவால் மற்றும் தல்வண்டி குமான் ஆகிய 5 கிராமங்களில் இந்த உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

இது குறித்து அமிர்தசரஸ் துணை ஆணையர் சாக்ஷி சாவ்னி கூறுகையில், "மஜிதாவில் ஒரு துரதிர்ஷ்டவசமான சோகம் நிகழ்ந்துள்ளது. நேற்று கள்ளச்சாராயம் அருந்தியவர்கள் ஆபத்தான நிலையில் இருப்பதாக 5 கிராமங்களிலிருந்து எங்களுக்குத் தகவல்கள் வந்தன. நாங்கள் எங்கள் மருத்துவக் குழுக்களை விரைந்தோம். எங்கள் மருத்துவக் குழுக்கள் இன்னும் வீடு வீடாகச் சென்று வருகின்றன. மக்களுக்கு ஏதேனும் அறிகுறிகள் இருந்தாலும் இல்லாவிட்டாலும், அவர்களைக் காப்பாற்றுவதற்காக நாங்கள் அவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்கிறோம்."

"இதுவரை 15 பேர் இறந்துள்ளனர். அரசு சாத்தியமான அனைத்து உதவிகளையும் வழங்கி வருகிறது. இந்த இறப்பு எண்ணிக்கை அதிகரிக்காமல் பார்த்துக் கொள்கிறோம். சப்ளையர்களை நாங்கள் கைது செய்துள்ளோம், மேலும் விசாரணை நடந்து வருகிறது" என்று அவர் கூறினார்.