அதிர்ச்சி... கர்ப்பிணி பேராசிரியை தற்கொலை ... அப்பா அடிச்சதால அம்மா செத்துட்டாங்க... 4 வயது மகன் சாட்சி!
தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் திருமறையூர் பகுதியில் வசித்து வருபவர் செல்வராஜ். இவருடைய மகன் 35 வயது பிரவீன்குமார்.இவருடைய மனைவி நாசரேத்தை சேர்ந்த ஜெபஸ்டின் சாமுவேல் மகள் ஷெர்லின் கோல்டா. இருவரும் 2019ல் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களின் மகன் 4 வயது டிஜோவின்ஸ். தம்பதிகள் இருவரும் நாசரேத்தில் உள்ள தனியார் கல்லூரியில் உதவி பேராசிரியராக பணியாற்றி வந்தனர். பேராசிரியர் கோல்டா தற்போது 5 மாத கர்ப்ப்பிணியாக உள்ளார். இதனால் கல்லூரியில் இருந்து விடுப்பு எடுத்துக் கொண்டு வீட்டில் இருந்தார். கடந்த சில மாதங்களாக கணவன் மனைவி இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.இந்நிலையில் நவம்பர் 22ம் தேதி இரவு தம்பதி இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து பிரவீன்குமார் குளியலறை சென்ற நேரத்தில் ஷெர்லின் கோல்டா வீட்டின் படுக்கை அறையில் சேலையால் தூக்கிட்டு தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார்.
சிறிது நேரத்தில் சத்தம் கேட்டு அதை பார்த்த குடும்பத்தினர் உடனடியாக அவரை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே கோல்டா பரிதாபமாக உயிரிழந்தார்.
இச்சம்பவம் குறித்து நாசரேத் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே பேராசிரியர் கோல்டாவின் தந்தை ஜெபஸ்டின் சாமுவேல் தனது மகள் இறப்பில் மர்மம் இருப்பதாகவும் இது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்த வேண்டும் எனவும் நவம்பர் 25ம் தேதி தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக ஜெபசிங் சாமுவேலிடம் உடையார்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர் விசாரணை நடத்தினர். தாயை இழந்த நான்கு வயது குழந்தையான டிஜோ வின்ஸ் தனது தாய் கோல்டாவை தனது தந்தை அடித்து விட்டதால் உயிரிழந்தார் என மழலை மொழியில் பேசினார். இந்த காட்சியை உறவினர்கள் செல்போனில் பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். தாய் மர்மமாக உயிரிழந்த நிலையில் அவரது 4 வயது மகன் பேசிய இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!
கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!