டெஸ்ட் கிரிக்கெட்டில் சுப்மன் கில் புதிய மைல்கல் சாதனை!

 

இலங்கைக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியின் முதல் நாளில், இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் சுப்மன் கில் 50 ரன்கள் எடுத்ததன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் 3,000 ரன்களைக் கடந்து புதிய மைல்கல்லை எட்டியுள்ளார்.

தனது 26 ஆண்டுகள் 349 நாட்களில் இச்சாதனையைப் படைத்ததன் மூலம், டெஸ்ட் போட்டிகளில் 3,000 ரன்களைக் கடந்த 4-வது மிக இளம் இந்திய வீரர் என்ற பெருமையை சுப்மன் கில் பெற்றுள்ளார்.

ஆட்டம்: இந்திய அணியின் கேப்டனாகப் பொறுப்பேற்றது முதல், 74.06 என்ற மிகச்சிறந்த சராசரியுடன் 6 சதங்கள் உட்பட 1,111 ரன்கள் குவித்து கேப்டனாகவும் பேட்டராகவும் தனது அபாரமான திறமையை வெளிப்படுத்தி வருகிறார்.