‘ஜனநாயகன்’ படம் பார்க்க சிங்கப்பூர் நிறுவனம் விடுமுறை அறிவிப்பு!

 

தமிழக முதலமைச்சர் விஜய்யின் கடைசித் திரைப்படமாகக் கூறப்படும் ‘ஜனநாயகன்’ நாளை உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், உலகம் முழுவதிலும் உள்ள விஜய் ரசிகர்கள் கொண்டாட்டங்களுக்குத் தயாராகி வருகின்றனர்.

திரைப்படம் வெளியாவதை முன்னிட்டுத் தமிழகத்தில் மட்டுமின்றி வெளிநாடுகளிலும் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இந்நிலையில், சிங்கப்பூரைச் சேர்ந்த தனியார் நிறுவனம் ஒன்று, தனது ஊழியர்கள் ‘ஜனநாயகன்’ திரைப்படத்தைப் பார்க்கும் வகையில் நாளை காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரை அரைநாள் விடுமுறை அளித்து உத்தரவிட்டுள்ளது.

இக்கால இடைவெளியில் ஊழியர்கள் திரைப்படத்தைப் பார்த்துவிட்டுப் பின்னர் பணிக்கு வருமாறு அந்த நிறுவனம் அறிவுறுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது. திரைப்பட வெளியீட்டிற்காக வெளிநாட்டு நிறுவனம் ஒன்று ஊழியர்களுக்கு பிரத்யேகமாக விடுமுறை அறிவித்திருப்பது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.