சாலமன் பாப்பையா மறைவு... பாரதி பாஸ்கர் கண்ணீர் மல்க இரங்கல்!

 

 

பிரபல தமிழறிஞரும் முன்னணிப் பட்டிமன்ற நடுவருமான பேராசிரியர் சாலமன் பாப்பையா (90) காலமானார். இவரது மறைவு தமிழ்த்திரை மற்றும் இலக்கிய உலகினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சாலமன் பாப்பையாவின் மறைவு குறித்துக் கண்ணீர் மல்க இரங்கல் தெரிவித்த பிரபல பட்டிமன்றப் பேச்சாளர் பாரதி பாஸ்கர், "தகப்பனை இழந்துவிட்டோம்; யாரும் இல்லாத அநாதையாகிவிட்டது போல் இருக்கிறது" எனக் கூறித் தனது ஆழ்ந்த வேதனையை வெளிப்படுத்தியுள்ளார்.