சோனியா காந்தி திடீர் மருத்துவமனை அனுமதி... ராகுல் காந்தி மருத்துவமனை விரைந்தார்!
அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவரும், தற்போதைய ராஜ்யசபா உறுப்பினருமான சோனியா காந்தி, இன்று (புதன்கிழமை) காலை உடல்நலக் குறைவு காரணமாகக் குருகிராமில் உள்ள மேதாந்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 79 வயதான சோனியா காந்திக்குத் திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டதைத் தொடர்ந்து, அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
வயிற்றுப் பகுதி மற்றும் சிறுநீரகப் பாதையில் ஏதேனும் தொற்று உள்ளதா என்பதை ஆய்வு செய்ய மருத்துவர்கள் பல்வேறு சோதனைகளை மேற்கொண்டனர். அவருக்கு ஒரு சிறிய அளவிலான மருத்துவ நடைமுறை மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிகிறது.
கடந்த சில மாதங்களாகவே சோனியா காந்திக்குத் தொடர்ந்து உடல்நலப் பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றன. கடந்த மார்ச் மாதம் 'சிஸ்டமிக் இன்பெக்ஷன்' காரணமாக டெல்லி கங்கா ராம் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டிருந்தார். ஜனவரி மாதத்திலும் சுவாசப் பிரச்சனை காரணமாக அவர் சிகிச்சை பெற்றது குறிப்பிடத்தக்கது.