சோயா சாஸ் மாவில் சறுக்கி விளையாடிய நபர் ....பதற வைக்கும் அதிர்ச்சி வீடியோ !

 

உத்திரப்பிரதேச மாநிலத்தில் உணவு தயாரிக்கும் ஆலை ஒன்றில் சோயா சாஸ் தயாரிப்பதற்கான மாவு கலவையில் நபர் ஒருவர் இறங்கிச் சறுக்கி விளையாடும் வீடியோ இணையத்தில் வெளியாகிப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உணவுப் பொருட்களின் சுகாதாரம் குறித்துப் பல கேள்விகளை எழுப்பும் வகையில் அமைந்துள்ள அந்த வீடியோவில், பெரிய தொட்டியில் நிரப்பப்பட்டுள்ள சோயா சாஸ் மாவில் அந்த நபர் ஜாலியாகச் சறுக்குகிறார். உணவுப் பாதுகாப்பு விதிகளுக்கு முரணாக ஆடை அணிந்தபடி மாவு கலவையில் அவர் சறுக்கி விளையாடுவது மக்களிடையே பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.  சமூக வலைதளங்களில் காட்டுத்தீ போல் பரவி வரும் இந்த வீடியோவைக் கண்டு நெட்டிசன்கள் பலரும் தங்களது பலத்த கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர்.

🚨 Warning for Noida Sector 27 soya chaap fans:
What you eat in the evening is made like this. a guy dragged across the floor through the batter.

Hygiene check needed ASAP. pic.twitter.com/XwwiQNyzlR

— 𝗚𝗮𝗺𝗲 𝗢𝗳 𝗕𝗷𝗽 🪷 (@Game_Of_BJP) July 26, 2026

உணவு உற்பத்தி மையங்களில் ஊழியர்கள் கடைப்பிடிக்க வேண்டிய அடிப்படை சுகாதார விதிமுறைகள் கூட இங்குப் பின்பற்றப்படவில்லை என விமர்சனங்கள் எழுந்துள்ளன. மனிதர்கள் உண்ணும் பொருட்களில் இத்தகைய அருவருப்பான செயல்களில் ஈடுபட்டது பொதுமக்கள் மத்தியில் பெரும் ஆத்திரத்தை மூட்டியுள்ளது. பாதுகாப்பற்ற முறையில் தயாரிக்கப்படும் உணவுகள் மனித ஆரோக்கியத்திற்குப் பெரும் ஆபத்தை விளைவிக்கும் என சுகாதார வல்லுநர்கள் எச்சரிக்கை விடுக்கின்றனர். இந்தச் சம்பவம் தொடர்பாகச் சம்பந்தப்பட்ட ஆலை நிர்வாகத்தின் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

வீடியோ வைரலானதைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தீவிர விசாரணைகளைத் தொடங்கியுள்ளனர். நேரில் ஆய்வு நடத்தப்பட்டு அந்த ஆலைக்கு உடனடியாகப் பூட்டு போடப்பட வேண்டும் எனப் பொதுமக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். மேலும் இது போன்ற சுகாதாரமற்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் இருக்க அனைத்து உணவு உற்பத்தி நி