ஒரு மாத ஊதியத்தை ஃபெஞ்சல் புயல் நிவாரண நிதிக்காக ஸ்டாலின் வழங்கினார்!
வங்கக் கடலில் உருவான “ஃபெஞ்சல் புயல்” காரணமாக தமிழகத்தின் பல மாவட்டங்களில் பெருமழை பெய்துள்ளது. இதனையடுத்து விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டங்களில் தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் சீரமைப்பு மற்றும் நிவாரண பணிகளை மேற்கொண்டு வருகிறது.
மீட்பு மற்றும் நிவாரண, தற்காலிக சீரமைப்பு பணிகளுக்கு ரூ.2,475 கோடி தேவைப்படுகிறது எனவும், இந்த இயற்கைப் பேரிடரின் விளைவுகளை சமாளிக்க மாநிலத்திற்கு அவசர நிதி உதவி தேவைப்படுவதாகவும், பாதிப்புகளின் அளவு மற்றும் மறுசீரமைப்பின் அவசரத் தேவையைக் கருத்தில் கொண்டு, இடைக்கால நிவாரணமாக ரூ 2000கோடியை உடனடியாக விடுவிக்க வேண்டும் எனவும் முதல்வர் மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்து பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
இதனையடுத்து, மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு, நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களுக்கு உணவு, அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் நிவாரண உதவிகள் அனைத்தும் தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்டு வருகின்றன.அதே நேரத்தில் போர்க்கால அடிப்படையில் தற்காலிக மறுசீரமைப்புப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கி பலரும் நிவாரண உதவிகளை வழங்கி வருகிறார்கள். குறிப்பாக, நேற்று நடிகர் சிவகார்த்திகேயன் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்து ரூ.10 லட்சம் வழங்கியுள்ளார். தற்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது ஒரு மாத ஊதியத்திற்கான காசோலையை முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்து வெளியிட்ட பதிவில் இன்று டிசம்பர் 5ம் தேதி முதல்வர் ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில், முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தன்னுடைய ஒரு மாத ஊதியத்திற்கான காசோலையை தலைமைச் செயலாளர் நா. முருகானந்தமிடம் வழங்கினார். தமிழக முதலவர் ஒரு மாதம் சம்பளம் ரூ.2 லட்சம் என சமூக வலைதளங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது
கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!
கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!