கொடூரத்தின் உச்சம்... 7 தெருநாய்கள் கடித்துக் குதறியதில் இளம்பெண் பரிதாப பலி... பகீர் சிசிடிவி காட்சிகள்!
மகாராஷ்டிர மாநிலம் புனே மாவட்டம் சாக்கன் அருகே உள்ள அம்பேதான் சௌக் பகுதியில், தெருநாய்கள் கடித்ததில் 32 வயதுப் பெண் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. கடந்த திங்கட்கிழமை அதிகாலை சுமார் 2 மணியளவில் ஷோபா வாகமரே என்ற பெண் சர்வீஸ் சாலை வழியாகச் சென்றபோது, 6-க்கும் மேற்பட்ட தெருநாய்கள் அவரைச் சூழ்ந்து சரமாரியாகத் தாக்கியுள்ளன. நாய்களிடமிருந்து தப்பிக்க அவர் கற்களை வீசிப் போராடியும், ஆவேசமடைந்த நாய்கள் அவரைத் தரையில் தள்ளி கை, கால் மற்றும் கழுத்துப் பகுதிகளில் கொடூரமாகக் கடித்ததால் அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டு அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
சாக்கன் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தெருநாய்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும், இது குறித்துப் புகார் அளித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் கூறி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். குறிப்பாகக் குழந்தைகள் மற்றும் முதியவர்கள் தனியாகச் செல்லவே அஞ்சுவதாகப் புகார் தெரிவித்துள்ள மக்கள், ஆபத்தான நாய்களை உடனடியாகப் பிடித்து அப்புறப்படுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். நகரங்களில் பெருகி வரும் தெருநாய் தொல்லைக்கு இந்தச் சம்பவம் ஒரு மிகச்சிறந்த எச்சரிக்கையாக அமைந்துள்ளது.