undefined

மாணவர்கள் உற்சாகம்... இன்று காலாண்டு விடுமுறை முடிந்து பள்ளிகள் மீண்டும் திறப்பு!

 

தமிழகத்தில் காலாண்டு விடுமுறை முடிந்து இன்று பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுகிறது. இன்று அதிகாலை முதலே மாணவ, மாணவிகள் உற்சாகத்துடன் பள்ளிகளுக்கு கிளம்பி செல்கின்றனர். 

தமிழகத்தில் 2025- 2026-ம் கல்வி ஆண்டுக்கான காலாண்டு தேர்வு கடந்த மாதம் 10ம் தேதி தொடங்கி 26ம் தேதி வரை நடைபெற்றது. பின்னர் காலாண்டு தேர்வு விடுமுறை விடப்பட்டது. 

நேற்றுடன் காலாண்டு தேர்வு விடுமுறை முடிவடைந்த நிலையில் இன்று பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு பள்ளிகளில் மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்து பள்ளிக்கல்வித்துறை சார்பில் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டது.

அதன்படி அனைத்து பள்ளிகளிலும் தூய்மை பணியாளர்கள் தூய்மை பணியில் ஈடுபட்டனர். மேலும் பள்ளி வளாகத்தில் ஆங்காங்கே தேங்கி கிடந்த குப்பைகள் மற்றும் முட்செடிகள், புதர்செடிகளை அகற்றினர். மேலும் பள்ளிக்கூடத்திற்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டன.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?