undefined

 இன்று முதல் விமான நிலையத்தில் பார்க்கிங் கட்டணம் திடீர்  உயர்வு... !

 
 


 
தமிழகத்தில் இன்று முதல் சென்னை விமானநிலையத்தில் உள்ள மல்டிலெவல் பார்க்கிங்கில் திடீரென உயர்த்தப்பட்டு உள்ளது. இதனால் பயணிகளும் வாடகை  வாகன ஓட்டுநர்களும் கடும் அதிர்ச்சிக்கு உள்ளாகினர்.  சென்னை விமான நிலையத்தில்  2022ல் டிசம்பர் 4ம் தேதி மல்டிலெவல் அடுக்குமாடி கார் பார்க்கிங் பகுதி செயல்பாட்டுக்கு வந்தது.  ஏற்கனவே இருந்த வாகன பார்க்கிங் கட்டணத்தை அதிகமாக உயர்த்தி நிர்ணயம் செய்திருந்தனர்.  கட்டண உயர்வுடன், இதுவரை மல்டிலெவல் கார் பார்க்கிங் பகுதிகளில்  வாகனங்களை நிறுத்தி, வெளியே எடுத்து வருவதில் வாகன ஓட்டிகளும் விமான பயணிகளும் பெரிதும் அவதிப்பட்டு வந்தனர். அதற்கான வழிகள் தெளிவாக இல்லை என பயணிகள் மற்றும் வாகன ஓட்டுநர்களிடையே கடும் அதிருப்தி நிலவி வருகிறது.  


சென்னை விமானநிலையத்தில் கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு, இன்று முதல் விமான நிலைய மல்டிலெவல் பார்க்கிங் பகுதியில் வாகனங்களுக்கான கட்டணம் திடீரென மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளது. இதுவரை கார்களுக்கு குறைந்தபட்சம் அரைமணி நேர கட்டணமாக ரூ.80 லிருந்து  ரூ.85 ஆக உயர்த்தப்பட்டு உள்ளது. இதுவரை அதிகபட்சம் 24 மணி நேரத்துக்கு ரூ.525 லிருந்து  ரூ.550 ஆக அதிகரித்துள்ளது. டெம்போ வேன்களுக்கு குறைந்தபட்ச கட்டணம் ரூ.315 லிருந்து தற்போது ரூ.330 ஆக அதிகரித்துள்ளது. இத்தகயை வாகனங்களுக்கு 24 மணி நேர கட்டணம் ரூ.1,050 ஆக இருந்தது, தற்போது ரூ.1,110 ஆக அதிகரித்துள்ளது.
இதுவரை பேருந்து, லாரிகளுக்கான குறைந்தபட்ச கட்டணம் ரூ.630 லிருந்து  தற்போது ரூ.660 ஆக அதிகரித்துள்ளது. இவற்றுக்கு 24 மணி நேர கட்டணமாக ரூ.2,100 லிருந்து தற்போது ரூ.2,205 ஆக அதிகரிக்கப்பட்டு உள்ளது. இதில் இருசக்கர வாகனங்களும் பார்க்கிங் கட்டண உயர்வில் தரப்படவில்லை. அரைமணியில் இருந்து ஒரு மணி நேர கட்டணமாக இதுவரை ரூ.20 மட்டுமே வசூலிக்கப்படுகிறது.  ஒரு மணியில் இருந்து 2 மணி நேர கட்டணமாக ஏற்கனவே ரூ.30 லிருந்து   தற்போது ரூ.35 ஆக அதிகரித்துள்ளது. முன்பு 24 மணி நேர கட்டணம் ரூ.95 வசூலிக்கப்பட்டது. இப்போது அக்கட்டணம் ரூ.100 ஆக உயர்ந்துள்ளது.

சென்னை விமானநிலையத்தில்  ஆகஸ்ட் மாதம் பயணிகளுக்கான வாகனங்கள், பிக்-அப் பாயிண்ட் திடீரென மாற்றப்பட்டு, ஒரு கிமீ தூரத்தில் உள்ள மல்டிலெவல் கார் பார்க்கிங் பகுதியில் 2வது தளத்துக்கு மாற்றப்பட்டது. இதற்கும் எவ்வித முன்னறிவிப்பும் வழங்கப்படவில்லை.  வாகனங்களுக்கான பார்க்கிங் கட்டணத்தை எந்தவித முன்னறிவிப்பும் இன்றி இன்று உயர்த்தப்பட்டதற்கு பயணிகள் மற்றும் வாகன ஓட்டுநர்களிடையே கடும் எதிர்ப்பும் அதிருப்தியும் நிலவி வருகிறது. கடந்த 2022ம் ஆண்டு, டிசம்பர் 4ம் தேதி அதிகாலையில் இருந்து ஏற்கனவே இருந்த பார்க்கிங் கட்டணம் அமலுக்கு வந்தது. இந்த வசூலை தனியார் நிறுவனம் மேற்கொண்டுள்ளது.
இந்நிறுவனத்திடம் பார்க்கிங் கட்டணம் வசூலிப்பதை ஒப்படைக்கும்போதே, 2 ஆண்டுகளுக்கு பிறகு பார்க்கிங் கட்டணத்தை சிறிதளவு உயர்த்திக் கொள்ளலாம் என அனுமதி வழங்கப்பட்டிருந்தது.  அதன் அடிப்படையில்தான், இன்று முதல் விமானநிலைய பார்க்கிங் கட்டணம் சிறிதளவு உயர்த்தப்பட்டு இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.   தற்போது முன்னறிவிப்பின்றி பார்க்கிங் கட்டண உயர்வு என்பது சரியல்ல என சென்னை விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!