குழந்தை அழுதுட்டே இருக்கு... கணவர் போனை எடுக்கல... இளம்பெண் தற்கொலை !
Sep 8, 2026, 21:15 IST
தெலங்கானா மாநிலம் வாரங்கல்லைச் சேர்ந்த அகிலா (20) என்ற பெண், குழந்தை அழுததன் காரணமாக தனது கணவர் ஹுசைனுக்கு வீடியோ கால் செய்துள்ளார். அந்த நேரத்தில் வேலையில் இருந்த கணவர் அழைப்பை எடுக்காததால் ஆத்திரமடைந்த அகிலா, எலி விஷம் குடித்துத் தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்துக் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.