இல்லத்தரசிகளின் ஊதியம் பெறாத வீட்டு வேலைகளுக்கு  மாதம் ரூ.30,000 தரலாம்...   உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!

 

 

வீடுகளில் இரவு பகல் பாராமல் உழைக்கும் இல்லத்தரசிகளின் பங்களிப்பு குறித்து இந்திய உச்சநீதிமன்றம் தற்பொழுது ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க உன்னதமான கருத்தைத் தெரிவித்துள்ளது. நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் குடும்பக் கட்டமைப்புக்கும் இல்லத்தரசிகள் செய்யும் தியாகங்கள் அளவிட முடியாதவை என்று நீதிபதிகள் புகழாரம் சூட்டியுள்ளனர். அவர்களின் உழைப்பை வெறும் கடமையாக மட்டும் பார்க்காமல், நாட்டின் கட்டுமானப் பணியாகக் கருத வேண்டும் என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது.

allowfullscreen

ஒரு விபத்து வழக்கை முழுமையாக விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் சூரியகாந்த் மற்றும் ஜே.பி.பார்திவாலா ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த முக்கிய விபரங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, வீட்டில் இருந்து குடும்பத்தைக் கவனித்துக் கொள்ளும் ஒரு சாதாரண இல்லத்தரசியின் மாதாந்திர உழைப்பின் மதிப்பானது குறைந்தபட்சம் 30,000 ரூபாய் எனத் தீர்ப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஒரு குடும்பத்திற்காக அவர்கள் செய்யும் சமையல், துப்புரவு மற்றும் கணவன், குழந்தைகளைப் பராமரிக்கும் பணிகளுக்குச் சந்தையில் உள்ள வேலைகளுக்கு இணையான மதிப்பு உள்ளதாக நீதிமன்றம் கௌரவித்துள்ளது.

இல்லத்தரசிகளின் இத்தகைய கடின உழைப்பானது நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்திக்கு (ஜிடிபி) மறைமுகமாக மிகப்பெரிய பங்களிப்பை வழங்கி வருவதாக நீதிபதிகள் தங்களது தீர்ப்பில் மிகத் தெளிவாக விவரித்துள்ளனர். விபத்துகளில் இல்லத்தரசிகள் உயிரிழக்கும் போது அவர்களுக்கு வழங்கப்படும் இழப்பீட்டுத் தொகையை வெறும் தோராயக் கணக்கில் மதிப்பிடக் கூடாது என்றும், அவர்களின் உழைப்பின் உண்மையான மதிப்பை உணர்ந்து கணக்கிட வேண்டும் என்றும் காப்பீட்டு நிறுவனங்களுக்கு நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. இல்லத்தரசிகளின் உழைப்புக்கு அங்கீகாரம் வழங்கும் வகையில் வந்துள்ள இந்த தீர்ப்பு நாடு முழுவதும் உள்ள பெண்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.