வெற்றி துரைசாமியின் உடலை கண்டறிந்த நீச்சல் வீரர்களுக்கு ரூ.1 கோடி அறிவிப்பு... தலைவர்கள் இரங்கல்!

 

கடந்த 8 தினங்களாக எங்கே இருக்கிறார் வெற்றி துரைசாமி என்று தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்ட நிலையில், நேற்று சட்லெஜ் நதியில் பாறைகளில் இடுக்கில் இருந்து வெற்றி துரைசாமியின் உடலை ஸ்கூஃபா நீச்சல் வீரர் கண்டுபிடித்தார். வெற்றி துரைசாமியின் உடலைக் கண்டுபிடித்த நீச்சல் வீரர்களுக்கு ரூ.1 கோடி அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை நகரின் முன்னாள் மேயரும், மனித நேய அறக்கட்டளையின் நிறுவனருமான சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமி, இமாச்சலப்பிரதேசம் கஷாங் பகுதியில் படப்பிடிப்புக்காக லொகேஷன் பார்க்க நண்பருடன் சென்றிருந்த நிலையில், இவர்களது கார் நிலைத்தடுமாறி சட்லெஜ் நதியில் விழுந்தது.

காவல்துறை, ராணுவம், விமானப் படை வீரர்கள், ஸ்கூபா நீர்மூழ்கி வீரர்கள் என தொடர்ந்து வெற்றி துரைசாமியைத் தேடும் பணிகளில் ஈடுபட்டனர். இந்நிலையில், நேற்று பிப்ரவரி 12ம் தேதி, விபத்து நடந்த 8வது நாளில், கார் விபத்து நடந்த பகுதியில் இருந்து சுமார் 2 கி.மீட்டர் தூரத்தில் வெற்றி துரைசாமியின் உடல் பாறைகளின் இடுக்கில் இருந்து மீட்கப்பட்டுள்ளது. மீட்கப்பட்ட வெற்றி துரைசாமியின் உடல் பிரேதப் பரிசோதனக்குப் பின் தமிழகத்திற்கு கொண்டு வரப்படும்.

வெற்றி துரைசாமியின் மறைவுக்கு தமிழக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பன்னீர்செல்வம், சசிகலா உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், 'வெற்றி துரைசாமி உடலைக் கண்டறிந்த ஸ்கூபா நீச்சல் வீரர்களுக்கு ரூபாய் ஒரு கோடி அளிக்கப்படும்' என சைதை துரைசாமி தெரிவித்ததாக இமாச்சல பிரதேச போலீசார் தெரிவித்துள்ளனர். இதை வெற்றி துரைசாமியின் உடலை கண்டறியும் தேடுதல் படையின் தலைமை அதிகாரியாக இருந்த அமித் குமார் ஷர்மா, நேற்று செய்தியாளர்களிடம்  பேட்டியளிக்கையில் தெரிவித்திருப்பதாகக் கூறப்படுகிறது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்