6வது நாளாக டேங்கர் லாரிகள் வேலை நிறுத்தம்... தீபாவளி சமயத்துல சிலிண்டர் தட்டுப்பாடு அபாயம்!
தொடர்ந்து 6வது நாளாக டேங்கர் லாரி உரிமையாளர்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில் தமிழகத்தில் தீபாவளி நெருக்கத்தில் கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது.
டேங்கர் லாரி உரிமையாளர்களுடனான பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாமல் தோல்வியடைந்த நிலையில், சமையல் கியாஸ் டேங்கர் லாரி உரிமையாளர்களின் வேலைநிறுத்தம் இன்று தொடர்ந்து 6வது நாளாக நீடிக்கிறது. ஆயில் நிறுவனங்களுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தை தீர்வின்றி முடிவடைந்ததால், போராட்டம் தொடரும் என சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
2025–2030 ஆண்டுக்கான புதிய டெண்டரில் 3,500 டேங்கர் லாரிகள் தேவை என அறிவித்திருந்த ஆயில் நிறுவனங்கள், 2,800 லாரிகளுக்கே அனுமதி கடிதம் வழங்கியுள்ளன. மீதமுள்ள வாகனங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதை எதிர்த்து, தென் மண்டல எல்.பி.ஜி. டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கம் கடந்த 9ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகிறது.
இதன் விளைவாக, சுத்திகரிப்பு நிலையங்களிலிருந்து பாட்லிங் பிளாண்டுகளுக்கு கியாஸ் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. நேற்று நடைபெற்ற காணொலி பேச்சுவார்த்தையில் 3 ஆயில் நிறுவனங்களின் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். ஆனால், கோரிக்கைகள் ஏற்கப்படாததால் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.
“நியாயமான கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் வேலைநிறுத்தம் தொடரும் என்று டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கத் தலைவர் சுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!