சிபிஐ வேங்கைவயல் மக்களுக்கு விரைவாக நீதியைப் பெற்றுத் தராது... தவெக தலைவர் விஜய் ஆவேசம்!
தமிழகத்தில் வேங்கைவயல் பிரச்சனைக்கு எதிராக பல்வேறு கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் குற்றமே செய்யவில்லை என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமா கூறியிருந்தார். நேற்று அங்கு போராட்டம் நடைபெற்ற நிலையில் பத்திரிகை ஊடகம் உட்பட வெளிநபர்கள் யாருக்கும் அனுமதி அளிக்கப்படவில்லை. போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் தவெக தலைவர் விஜய் இது குறித்து ”சிபிஐ விசாரணை வேங்கைவயல் மக்களுக்கு விரைவாக நீதியைப் பெற்றுத் தராது.
இது வேங்கைவயல் மக்களுக்கு விரைவாக நீதியைப் பெற்றுத் தராது. வேங்கைவயல் விவகாரத்தில் உண்மைக் குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும். வருங்காலங்களில் இது போன்ற ஒரு கொடுஞ்செயல் நிகழாத வண்ணம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும். ஆகவே, கடும் கண்டனத்திற்கு உரிய, மனிதத் தன்மையற்ற செயலான வேங்கைவயல் விவகாரத்தில் உயர்நீதிமன்றத்தின் நேரடிக் கண்காணிப்பில், சிறப்புப் புலனாய்வுக் குழு நியமித்து விசாரணை நடத்தி, உண்மையானக் குற்றவாளிகளுக்குத் தண்டனை வழங்க வேண்டும் எனத் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்” என பதிவிட்டுள்ளார்.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!
தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?
செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!
தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!